விஷ எதிர்ப்பு மருந்து பற்றாக்குறை: பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
விஷ எதிர்ப்பு மருந்து பற்றாக்குறை
விஷ எதிர்ப்பு மருந்து பற்றாக்குறையினால் பாம்பு கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆறு மாதங்களுக்கு எதிர்ப்பு விஷம் இருப்புக்கள் இருப்பதால் விசாரணை
"பற்றாக்குறை இருப்பதாக வெளியான அறிக்கைகளுக்கு மாறாக, ஆறு மாதங்களுக்கு எதிர்ப்பு விஷம் இருப்புக்கள் இருப்பதால் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்த வழக்கில், குழந்தைக்கு பெரும்பாலான மருந்துகளுக்கு ஒவ்வாமை இருந்தது.
எனவே, மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் விஷத்திற்கு எதிரான சிகிச்சையை வழங்குவதற்கு முன்னர் குழந்தையின் அனாபிலாக்ஸிஸ் நிலைமைக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியிருந்தது.
மருத்துவமனையில் பற்றாக்குறையாக இருந்த குளோர்பெனமைன் ஊசி மருந்தை தனியாரிடமிருந்து வாங்குவதற்காக அதிகாரி ஒருவர் மருந்து சிட்டை எழுதிக் கொடுத்தார். ஆனால், தனியார் மருந்தகங்களில் கூட மருந்து கிடைக்கவில்லை
இந்நிலையில், குறித்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சகம் விசாரணை நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையில், தனியார் மருந்தகங்களிலும் லேசான மற்றும் மிதமான காய்ச்சலுக்கான சிகிச்சையான ChlorphenamineIV மற்றும் Paracetamol Suppositories-க்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் (AIPPOA) தெரிவித்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,