தேசிய தலைவருக்கும் மாவைக்குமான தொடர்பு : சபையில் அம்பலப்படுத்திய எம்.பி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜாவிற்கும் (Mavai Senathirajah) இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், தமிழரசின் முன்னாள் தலைவர் மாவை.சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 வது வயதில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று மறைந்த தலைவர் மாவை.சேனாதிராஜாவிற்கு அனுதாபப் பிரேரணை இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம்,“ அமரர். மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய பரப்பில் ஆறு தசாப்த காலம் தனிப்பெரும் தலைவராக இருந்து தமிழரசு கட்சியின் தலைமைகளுடன் செயற்பட்டு புரட்சியை ஏற்படுத்திய தலைவர் என தெரிவித்தார்.
மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
