வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அசமந்தம் : மக்கள் விசனம்
வலிகாமம் (Valikamam) கிழக்கு பிரதேச சபையின் அசமந்த போக்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதி விளக்கு எரியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறை (Point Pedro) பிரதான வீதியில் ஆவரங்கால் சந்திப் பகுதியில் உள்ள தெரு விளக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செயலிழந்து காணப்படுவதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெற ஏதுவாக இந்த தெரு விளக்கு ஒளிராமையே காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
வலிகாமம் பிரதேச சபை
இது தொடர்பில் வலிகாமம் பிரதேச சபைக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அவர்கள் அசட்டையீனமாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் ஆராய்ந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தெரு விளக்கு ஒளிராத காரணத்தினால், கடந்த வாரம் சரியான வெளிச்சமின்மை காரணமாக வீதியில் நடந்து சென்ற ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதியதனால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |