நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிசூடு -ஒருவர் படுகாயம்
அம்பாறை - தீகவாபி பிரதான வீதியில் மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் காவல்துறையின் உத்தரவை மீறி ஓடிய மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீகவாபியில் இருந்து எரகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் நிறுத்துமாறு காவல்துறையின் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் உத்தரவிட்ட போதும் அவர்கள் தொடர்ந்தும் ஓடியுள்ளனர்.
விரட்டிச் சென்ற காவல்துறை

பின்னர் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற காவல்துறையினர் இரு தடவைகள் அவர்களுக்கு மேலும் உத்தரவு பிறப்பித்த போதும் அவர்கள் ஓட முற்பட்ட போது பின் இருக்கையில் பயணித்தவரின் வலது காலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைது செய்யப்பட்டு அம்பாறை காவல்துறை அத்தியட்சகரிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.