ரணில் ஆட்சிக்கு வராவிட்டால் பெட்ரோலின் விலை 3000 ரூபாவை கடந்திருக்கும் : கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

Ceylon Workers Congress Ranil Wickremesinghe Senthil Thondaman sl presidential election
By Sathangani Sep 16, 2024 03:58 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அன்று நாட்டைப் பொறுப்பேற்க வரவில்லை என்றால், பெட்ரோலின் விலை 3000 ரூபாவையும் கடந்திருக்கும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நேற்று (15) நுவரெலியாவில் (Nuwara Eliya) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது, 2021, 2022ஆம் ஆண்டுகளில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த காலகட்டமாகும். யுத்தத்தின் போதுகூட இத்தகைய நெருங்கடிகளை இலங்கை எதிர்கொண்டிருக்கவில்லை. நாட்டை பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல எவராவது வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஒருவரும் வரவில்லை.

மக்களை ஏமாற்றுகிறதா தமிழரசுக்கட்சி: அரியநேத்திரனை சந்தித்த மாவை - சஜித்தின் மேடையில் சுமந்திரன்

மக்களை ஏமாற்றுகிறதா தமிழரசுக்கட்சி: அரியநேத்திரனை சந்தித்த மாவை - சஜித்தின் மேடையில் சுமந்திரன்

எரிபொருள் வரிசை 

ரணில் விக்ரமசிங்க அன்று நாட்டை பொறுப்பேற்க வரவில்லை என்றால், இன்று எரிவாயுவின் விலை 20ஆயிரத்தை கடந்திருக்கும். அரிசியின் விலை 1000ம் ரூபாவையும் பெற்றோலின் விலை 3000ம் ரூபாவையும் கடந்திருக்கும்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றபின்னர் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் படிப்படியாக குறைந்தன. தற்போது நாடு இக்கட்டான நிலையை கடந்து பயணித்துகொண்டிருக்கும் தருணத்தில் அனைவரும் ஆட்சியை பொறுப்பேற்க முன்வருகின்றனர். நாட்டை மீட்டெடுத் தலைவருடன் அடுத்த ஐந்து ஆண்டுகளும் பயணித்தால் நாடு முன்னோக்கி நகரும்.

ரணில் ஆட்சிக்கு வராவிட்டால் பெட்ரோலின் விலை 3000 ரூபாவை கடந்திருக்கும் : கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு | The Price Of Petrol Will Exceed 3000 Rupees In Sl

அதைவிடுத்து ஏனையவர்களை நம்பி வாக்களித்தால் அவர்கள் எரிபொருளுக்காகவும், அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும் வரிசையில் சென்று நிற்க போவதில்லை. நாம் தான் வரிசையில் சென்று நிற்க வேண்டும். இதற்கு இ.தொ.கா ஒருபோதும் இடமளிக்காது. அதனால்தான் இ.தொ.கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவெடுத்தது.

சம்பளப் பிரச்சினையை பற்றியே அனைவரும் பேசுகின்றனர். 1350 ரூபா அடிப்படை சம்பளத்தை இ.தொ.கா பெற்றுக்கொடுத்துள்ளது. இதற்கான வர்த்தமானியும் வெளியாகிவிட்டது. எஞ்சியுள்ள 350 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பது இ.தொ.காவின் பொறுப்பு.

7 கிலோ அதிகமாக பறித்தால் 50 ரூபா வீதம் 350 ரூபாவை வழங்குவதாக கம்பனிகள் கூறியது. ஆனால், அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. 7 கிலோ பறித்தால் மேலதிகமாக 350 கிடைக்கும் என எமக்கு தெரியாதா. அல்லது 10 கிலோ அதிகமாக பறித்தால் 500 ரூபா கிடைக்கும் என எமக்குத் தெரியாதா.

நாம் கோருவது கம்பனிகள் ஊடாக நியாமான முறையில் 350 ரூபா கொடுப்பனவை அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே. தோட்டத் தொழிலாளர்களை பகடைக்காயாகப் பயன்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் காங்கிரஸ் கையெழுத்திடாது. அது தேர்தல் கால நெருக்கடியாக இருந்தாலும் சரி நாம் தெரிவிக்க மாட்டோம்.

தனியார் தொலைக்காட்சியொன்றுடன் சஜித்துக்கு டீல்: தலதா அத்துகோரல பகிரங்கம்

தனியார் தொலைக்காட்சியொன்றுடன் சஜித்துக்கு டீல்: தலதா அத்துகோரல பகிரங்கம்

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு

மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் (Arumugam Thondaman) ஆகியோர் எமக்கு கூறியது இ.தொ.காவின் இறுதி மூச்சு இருக்கும் வரை மலையக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதனால் காங்கிரஸை கேள்வி கேட்கும் தகுதி எவருக்கும் இல்லை.

காங்கிரஸ் அனைத்துத் தொழிலாளர்களுக்கும்தான் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளது. விமர்சிப்பவர்களிடம் நாம் விடுக்கும் சவாலானது, முடிந்தால் உங்கள் தொழிற்சங்கத்தில் உள்ளவர்களுக்காவது 350 ரூபாவை பெற்றுக்கொடுங்கள்.

ரணில் ஆட்சிக்கு வராவிட்டால் பெட்ரோலின் விலை 3000 ரூபாவை கடந்திருக்கும் : கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு | The Price Of Petrol Will Exceed 3000 Rupees In Sl

முடியாவிட்டால் 35 ரூபாவையேனும் பெற்றுக்கொடுங்கள். இல்லையேன் 3 ரூபாவை சரி வாங்கிக்கொடுக்க முயற்சி செய்யுங்கள். அப்படி முடியாவிட்டால் எதற்கு தொழிற்சங்கங்களை நடத்துகின்றனர். காங்கிரஸை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் இலங்கையில் எந்தவொரு தொழிற்சங்கத்துக்கும் துப்பு இல்லை என்பதுடன், தகுதியும் இல்லை.

ஆகவே, எஞ்சியுள்ள 350 ரூபாவையும் காங்கிரஸ்தான் பெற்றுக்கொடுக்கும். லயன் அறைகளையும் அதனை சுற்றியுள்ள இடத்தையும் கிராமங்களாக அங்கீகரிக்குமாறு ஜனாதிபதியுடன் கோரியிருந்தோம். லயத்தில் ஒரு ஆணி அடிக்கக்கூட எமக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறான ஒரு உரிமை அற்றவர்களாக நாம் வாழ வேண்டுமா?

ஆகவே, எமது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். லயத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் காணியை கிராமங்களாக அங்கீகரிக்குமாறு கோரியுள்ளோம்.

2004 ஆம் ஆண்டு அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) அமைச்சராக இருந்த வேளையில் ஒரு அங்குல காணியைக் கூட மக்களுக்கு வழங்கியதில்லை. சஜித் பிரேமதாச (Sajith Premadasa) 2015 - 2019 வரையில் வீடமைப்பு அமைச்சராக இருந்தார்.

இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு மிஞ்சியதாக NHDA ஆல் ஒரு வீட்டைக்கூட கட்டித்தரவில்லை. அமைச்சராக இருந்தபோது மலையகத்தை தெரியாதவர் கண்களுக்கு ஜனாதிபதி தேர்தலின் போதா மலையக மக்களை தெரிகிறது.

இலங்கையின் இறுதி தேர்தலாக அமையப்போகும் அநுரவின் வெற்றி : எச்சரிக்கும் தயாசிறி

இலங்கையின் இறுதி தேர்தலாக அமையப்போகும் அநுரவின் வெற்றி : எச்சரிக்கும் தயாசிறி

மலையக மக்களுக்கு வாக்குரிமை

இன்று மலையக மக்கள் மீது அக்கறையுள்ளவர்கள் போன்று பேசுகின்றனர். ஆனால், அதிகாரம் இருந்த தருணத்தில் அவர்கள் எதனையும் செய்யவில்லை. 1988 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன (J. R. Jayewardene) காலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானே (Savumiamoorthy Thondaman) மலையக மக்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுத்தந்தார். அதற்கும் மற்றைய வேட்பாளர்கள் உரிமை கோருவது தவறானது.

ரணசிங்க பிரேமதாசதான் (Ranasinghe Premadasa) மலையக மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்ததாக வரலாறு தெரியாதவர்கள் தவறாக பேசிவருகின்றனர். ஆனால், பிரேமதாச ஜனாதிபதியாக போட்டியிட்ட போது மலையக மக்களும் அவருக்கு வாக்களித்தனர்.

ரணில் ஆட்சிக்கு வராவிட்டால் பெட்ரோலின் விலை 3000 ரூபாவை கடந்திருக்கும் : கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு | The Price Of Petrol Will Exceed 3000 Rupees In Sl

1988 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியால் மலையக மக்களுக்கு வாக்குரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் தவறான கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். மலையக மக்களுக்காக பல அபிவிருத்திட்டங்களை செய்தவரே ரணில் விக்ரமசிங்க. வீடமைப்புத் திட்டங்களை கொண்டுவந்தார். பிரதேச செயலகங்கள் மற்றும் புதிய பிரதேச சபைகளை உருவாக்கினார்.

எனவே, ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும் ஜனாதிபதிக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இ.தொ.கா பின்வாங்குமா என அண்மைய நாட்களாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், இ.தொ.கா ஒரு முடிவை எடுத்தால் அந்த முடிவில் இருந்து பின்வாங்காது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெற வைப்பதே இ.தொ.காவின் பிரதான கடமை. ஜனாதிபதியின் வெற்றிக்காக இ.தொ.கா முன்னின்று செயற்படும்“ என தெரிவித்தார்.

யாழில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட சஜித்

யாழில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட சஜித்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி