இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதே வழி - நாடாளுமன்றில் இடித்துரைப்பு

parliament economic development Siddharthan ethnic-problem
By Sumithiran Dec 10, 2021 06:26 PM GMT
Report

வரவு செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லல்பட்டுத்திரிகின்றார் . இந்த வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போதே அவர் கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார் . எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண்பதுதான்  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான த. சித்தார்த்தன்(Siddharthan) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு ,பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு ,நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு,சமுர்த்தி உள்ளக  பொருளாதார ,நுண்நிதிய ,சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பலமான. செல்வாக்குமிக்க ,அரசின் செல்வாக்குள்ள ,நிதி விடயத்தில் மட்டுமல்லாது ஏனைய  விடயங்களிலும் கூட பலமாகவுள்ள அமைச்சர்தான் பஷில்  ராஜபக்ச.யுத்த காலத்தில் வட,கிழக்கிலே இருக்கக்கூடிய இடங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று அந்தப் பகுதிகளை பார்வையிட்டு அங்கு தேவையான அபிவிருத்திகள் பற்றி அங்கிருக்கக்கூடிய அரசியல் சமூக ,அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயல்பட்டு வந்துள்ளார்.

ஆனால் இன்று அவரின் செயல்பாடுகள் இன்றுள்ள நிதி நெருக்கடியினாலோ என்ன காரணத்தினாலோ கொஞ்சம் குறைவாகவே பலரும்  பார்க்கின்றனர்.

வடக்கு,கிழக்கு 30,40   வருடங்களாக யுத்தத்தை கண்டுவந்த இடம்.ஏறக்குறைய ஒரு இலட்சம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அங்குள்ளன . அவர்களுக்கான வருமானங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. முக்கியமாக இந்த கொரோனா காலத்திலே உலகம் முழுக்க கஷ்டங்கள் உள்ள காலத்திலே நாளாந்த வருமானங்களை பார்த்திருக்கின்ற மக்கள் மத்தியிலே இந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்  மிக கஷ்டத்தில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியிலே அரசு உதவ  வேண்டும். குடிசைக் கைத்தொழில், ஆடுவளர்த்தல் மாடு, கோழி வளர்த்தல் போன்றவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம் என பலர் கூறுகின்றனர். கொடுக்கலாம் அதில் பிரச்சினையில்லை. ஆனால் அதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் இன்று பல மக்களிடம் ஆட்டிறைச்சி கோழி இறைச்சி வாங்கி சாப்பிட பணம் இல்லை. இதுதான் உண்மை.

ஆகவே அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய கைத்தொழில் பொருட்கள் எல்லாம் வீடுகளில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றை சந்தைப்படுத்துவதற்கு உதவி செய்வதுடன் அவர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு ஏதாவது ஒரு வழியில் அமைச்சர் உதவ வேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லல்பட்டுத்திரிகின்றார் . இந்த வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போதே அவர் கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார் . இந்தியா. சர்வதேச நாணய நிதியம், பங்களாதேஷ் இப்படி பல நாடுகள் ,அமைப்புகளிடம் கடன் கேட்கும் நிலைமையிலேயே இருக்கின்றோம்.

இவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தமைக்கு மிக முக்கிய காரணம் இந்த அரசோ கொரோனாவோ  மாத்திரமல்ல. ஏறக்குறைய சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்த நாட்டில் இருக்கக்கூடிய  ஸ்திரமில்லாததன்மை. இது தேசிய இனப்பிரச்சினையால் வந்த பிரச்சினை.  இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பல மாநாடுகள், கூட்டங்கள், ஒப்பந்தங்கள் எல்லாம் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன.இந்த நாட்டுக்குள் மாத்திரமல்ல நாட்டுக்கு வெளியே கூட நடந்தன.

நான் இந்த அரசை மட்டும் கூறவில்லை ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு முயற்சிகளை எடுக்கும் போது அதனை எதிர்க்கட்சிகள்  குழப்புவதே வழமை .திம்பு, ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த ஸ்திரமற்ற நிலைமைக்கு காரணம்.

இந்த யுத்தம் முடிந்தவுடன் புலம்பெயர் தமிழர்கள் பலர் இங்கு நிதிகளைக்கொண்டு வந்து முக்கியமாக வடக்கு,கிழக்கு பகுதிகளில் தொழில் முயற்சிகளை   ஆரம்பிக்க விரும்பினர் .ஆனால் அதற்கு பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இன்று கூட மீன்பிடித்துறையில்  முதலீடு செய்ய பலர்  தயாராக   இருக்கின்றபோது கூட , அமைச்சர் அதனை உடனடியாக செய்ய கையெழுத்து ப்போட்டுக்கொடுத்தால்   கூட  தடைகள் ஏற்படுத்தப்பட்டு அந்த முதலீடு செய்ய வந்தவர்கள் திரும்பிச் சென்ற நிலைமைகளையும் நாம் பார்த்துள்ளோம்.

மீன்பிடி அமைச்சர் எடுத்த முயற்சிகள் எல்லாம் இந்த தடைகளினால் பின்தள்ளப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால்தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணும் .

முதலாவதாக தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண்பதுதான்  பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்க முடியும். இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தான் இந்த நாட்டின் பிரஜை என்பதனை உணரக்கூடிய வகையில் இருந்தால் இன்று கூட வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை செய்ய  பலர்  தயாராகவுள்ளனர். அதற்கு   முதலீடுகளை செய்ய ஏற்படுத்தப்படும் தடைகள்  , முதலீடுகள் பாதுகாக்கப்படுமா என்ற அச்சம் என்ற இரண்டையும் நீங்கள் இல்லாமல் செய்ய வேண்டும்.

அமைச்சர் பசிலுக்கு இதற்கான திறமை ,வல்லமை இருக்கின்றது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் அவரின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015