வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து மொத்த குடும்பமும் பலியான துயரம்
ஹோமாகம மாகமன்ன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிகாயமடைந்து பொரளை ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது மகளும் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாகம்மன பிரதேசத்தில் வசித்து வந்த ரிதுஷி ரணசிங்க என்ற ஆறு வயது மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 25ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஹோமாகம மாகம்மன பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது உயிரிழந்த ஆறு வயது சிறுமி, தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் அறைக்குள் இருந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தந்தை அதே நாளில் இறந்தார், தாய் மறுநாள் இறந்தார் மற்றும் மூத்த சகோதரி சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தார். லசந்த புத்திக 47, (தந்தை) காளிகா தேவி 35, (தாய்) மற்றும் காவிந்தி ரணசிங்க 19, (மூத்த சகோதரி) ஆகியோர் இந்த தீ விபத்தில் உயிரிழந்ததுடன், அவர்களது சடலங்களின் இறுதிக் கிரியைகள் டயகம மலர் மண்டபத்தில் இடம்பெற்றது.
படுகாயமடைந்த ஆறு வயது மகள் ரிட்ஜ்வே லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.