மத்திய அரசின் கீழ் தெல்லிப்பளை வைத்தியசாலை - நேரில் ஆராய்ந்த அமைச்சர்கள்
வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அண்மையில் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடல் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வழங்குதல் குறித்து கடந்த நாட்களில் வடக்கின் எம். பிக்களுக்கு இடையில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் வாக்குவாதங்கள் வலுபெற்றிருந்தன.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை இதன்போது மேற்கொண்டார்.
வைத்தியசாலையின் சேவைத் தரத்தை உயர்த்துதல், நிர்வாக மற்றும் வள ஒதுக்கீட்டு வசதிகளை மேம்படுத்துதல், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
குறைபாடுகள் மற்றும் தேவைகள்
இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கூறிய கருத்துக்களை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்தியில்,
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு வளக்குறைபாடுகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.

அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தியுள்ளது.
அவற்றுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தரமான, சமமான மற்றும் திறன்மிக்க சுகாதார சேவையை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும்” என தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்