ஊடகவியலாளரை தாக்க முற்பட்ட தேரர்: வெடித்த சர்ச்சை
ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர், ஊடகவியலாளர் ஒருவருக்கு கடும் தொனியில் பதிலளித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தநிலையில், ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு கோபம் கொண்டு பல்லை உடைப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராமையவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சீலரத்ன தேரர் சென்றுள்ளார்.
வெடித்த சர்ச்சை
இல்லத்தில் இருந்து வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர்கள், நீங்கள் பிரதமர் ஹரிணிக்கு முன்னர் திட்டினீர்கள்,இப்போது சார்பாக பேசுகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கு தேரர் கோபம் கொண்டு கையை நீட்டி பயமுறுத்தும் விதத்தில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கருத்து தெரிவித்த தேதரர், “பிரதமர் ஹரிணியின் நல்ல விடயங்களுக்கு நான் எப்போதும் சார்பாகவே இருப்பேன்.
தர்மத்துக்கு இழுக்கு
தவறை சுட்டிக்காட்டி பேசுவேன், நீங்கள் நினைக்கும் பெண்மணியல்ல பிரதமர் ஹரிணி, ஜே.வி.பி அவருக்கு எதிராக செயற்பட முனைந்தால் அனைத்தையும் முறியடிக்கும் வலிமையை கொண்டுள்ளார்.
அத்தோடு, கல்வியில் முன்னிலை வகிக்கும் அவருக்கு எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் திறமை இருக்கின்றது, ஒரு பால் உறவை ஊக்கப்படுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
ஒரு பௌத்த மத குரு அவ்வாறு கோபத்துடன் செயற்படுவது, பௌத்த தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயற்பாடாகும் என புத்திஜீவிகள் மற்றும் சிரேஷ்ட ஊடவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
