திலீபனின் நினைவு ஊர்தி மாங்குளம் நோக்கி பயணம்
திலீபனின் நினைவேந்தல்
தியாகி திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனியானது இன்று மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி யாழ்ப்பாணத்தை நோக்கி பயணப்படும் நிலையில் இன்று மாங்குளம் பகுதியை நோக்கி நகர்ந்து வருகின்றது.
பொத்துவில் பிரதேசத்திலிருந்து கடந்த 15 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று ஊர்தி பவனி இன்று ஏழாவது நாளாக நகர்கிறது.
ஊர்திப் பவனி
மன்னார் பகுதியைச் சென்றடைந்த ஊர்திக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த வாகன ஊர்தி பவனி மன்னாரின் கொக்குப்படையான், அரிப்பு, முருங்கன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
திலீபன் ஊர்தி நினைவேந்தல் பவனி இன்று மாங்குளம் பகுதியைச் சென்றடையவுள்ளதுடன், நாளை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.