பழிவாங்குவது மட்டுமே ஒரே நோக்கம்: அரசாங்கத்தை சாடும் முன்னாள் அமைச்சர்
மக்களுக்கு நன்மை செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரே திட்டம் பழிவாங்கல் மட்டுமே என முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு டார்லி வீதியில் உள்ள இலங்கை சுதந்திரக் கட்சி தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அத்தோடு, அரசு ஊழியர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து, இடமாற்றம் செய்து ஊடக நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர, இன்று அவர்கள் முக்கியமான எதையும் செய்வதாகத் தெரியவில்லை என்றும் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்றும், அதிக அளவில் குறைக்கப்படும் என்று அவர்கள் கூறிய மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
