நாடளாவிய ரீதியில் களமிறக்கப்பட்டும் 54000 காவல்துறையினர்: வெளியான காரணம்
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 காவல்துறையினரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரவிட்ட (Asanga Karavita) மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (colombo) நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பதாகைகள்
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அசங்க கரவிட்ட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜூலை 31ஆம் திகதி முதல் (28) வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 1,285 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும், இதர சம்பவங்கள் தொடர்பில் 56 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |