சிறையில் கஸ்ஸப தேரர் வகுக்கும் வியூகம்! அச்சத்தில் மூன்று தேரர்கள்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதம் பேசிய கசுன் திலுக்க குலரத்தன என்ற பெயரை கொண்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், சிறையில் இருக்கும் மூன்று தேரர்களை பயமுறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக தெரியவந்தள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் சட்ட விரோத கட்டுமானங்கள் தொடர்பில் ஒன்றும் அறியாமல் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி வழக்கிலிருந்து விடுபட மூன்று பௌத்த பிக்குகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பலாங்கொடை கஸ்ஸப தேரரின் அச்சுறுத்தலால் சிறையில் உள்ள சம்பந்தப்பட்ட மூன்று தேரர்களும் உதவியற்றவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
கஸ்ஸப தேரரின் நோக்கம்
குறித்த பிரச்சினையை பௌத்த மக்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் கஸ்ஸப தேரர் செயற்படுவதாகவும், மூன்று பிக்குகள் வழக்கிலிருந்து விடுதலை பெற்றால் தனது நோக்கம் நிறைவேறாமல் போய் விடும் என்பதால் அவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |