நாளாந்தம் இறக்கும் இலங்கையர் : வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில்(sri lanka) வாய்ப் புற்றுநோயால் நாளொன்றுக்கு 3 பேர் உயிரிழப்பதுடன் ஆண்டுதோறும் சுமார் 3,000 புதிய வாய்ப் புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன என்று இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் முகம், வாய் மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சையியல் நிபுணருமான வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் ஆண்களிடையே பொதுவாகப் பதிவாகும் புற்றுநோயான வாய்வழிப் புற்றுநோய், அடையாளம் காணப்பட்ட காரணிகளில் 80%-85% க்கும் அதிகமானவற்றால் ஏற்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
100% குணப்படுத்த முடியும்
எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய இந்த நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் 100% குணப்படுத்த முடியும் என்றும் நிபுணர் கூறினார்.
உடனடியாக மருத்துவ சிகிச்சை
அதன்படி, வாயில் கட்டி, வெள்ளை அல்லது சிவப்புப் புள்ளி அல்லது ஆறாத காயம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். ஏனெனில் இவை பெரும்பாலும் புற்றுநோய்க்கு முந்தைய அறிகுறிகளாகும் என குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்