யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் அகதிகளாக தஞ்சம்
Sri Lankan Tamils
Jaffna
Mannar
Tamil nadu
By Vanan
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று (22) கடல் மார்க்கமாகச் சென்று தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மூவரே இவ்வாறு சென்றுள்ளனர்.
மரைன் காவல்துறை விசாரணை
தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சிலர் தவித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து மரைன் காவல்துறையினர் படகில் சென்று இன்று சனிக்கிழமை (22) காலை அவர்களை மீட்டு, தனுஷ்கோடி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 7 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி