யாழ் நல்லூர் ஆலய சூழலில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy temple) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, ஆலய வளாகத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.
அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம்
அதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளானவர்கள் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள்.
உற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம் அதிக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து காவல்நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்தில் வெடி குண்டு இருக்கின்றது என அநாமதேய தொலைபேசி அறிவிப்பு வந்ததால் சோதனை நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

