நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்ய அனுமதி! வெளியானது விசேட வர்த்தமானி
இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்ட மாபிள்களை நிபந்தனைக்குட்பட்டு மீண்டும் இறக்குமதி செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதலீட்டுச் சபை திட்டங்கள் அல்லாத அங்கீகரிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்கள், கலப்பு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அரசாங்கத் திட்டங்களுக்காக குறித்த இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், மீள் விற்பனை நோக்கத்திற்காக இது தொடர்பான சாதனங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக் கூடாது எனவும் வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
இதற்கான கொடுப்பனவு 180 நாட்களுக்குள் கடன் கடிதங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர், திறைச்சேரி செயலர், நிதியமைச்சர் ஆகியோரின் அனுமதியைப் பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளடங்குகிறது.
இதற்கான கொடுப்பனவு 180 நாட்களுக்கான வங்கி கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்ய இறக்குமதி கட்டுப்பாட்டாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

