டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலா கப்பல் மாயம்!
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்முழ்கி கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் திகதி நள்ளிரவில் 2200பேருடன் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த டைட்டானிக் எனும் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்துக்குள்ளானது.
வரலாற்றில் இடம்பிடித்த டைட்டானிக் கப்பல் விபத்தில் 1600 பேர் பலியாகினர்.
மாயமான சுற்றுலா கப்பல்
கடந்த 1985 ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இந்தநிலையில், கப்பல் மூழ்கிய இடத்தை பார்வையிட சில சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானதாக சர்வதேச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், குறித்த நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கப்பலில் எத்தனை சுற்றுலா பயணிகள் சென்றனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
