டலஸை ஏன் ஆதரித்தோம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தை முடிக்கும் மூன்று வேட்பாளர்களில் யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்கும் இன்றைய முக்கிய வாக்கெடுப்பில் இடைக்கால அதிபராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந் நிலையில் “இந்த இடைக்காலத் தேர்தலில் சிறந்த தெரிவுகள் எதுவும் இல்லை” எனவும் எமக்கு முன்பாக இருக்கும் தெரிவுகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக கவனமாக ஆராய்ந்து, டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளோம் என த.தே.கூ ஊடக பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கிய மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இடைக்கால அதிபர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டை ஆள்வதற்கான அங்கீகாரத்தையும் தார்மீக உரிமையையும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு நாடாளுமன்றத்துக்கு உள்ளது.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க கூடிய அரசு
எல்லாமக்களுக்கும் செவிசாய்த்து, உள்வாங்கி, சமபிரஜைகளாக மதிப்பதே பொருளாதார மீட்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் வழிகோலும் என்பது எமது நம்பிக்கை. பொருளாதார வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் அத்தியாவசியமான தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வுக்கு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம் 9/10
— M A Sumanthiran (@MASumanthiran) July 20, 2022
நீண்ட போரின் தாக்கங்களாலும் சகல அரசாங்கங்களினது புறக்கணிப்பாலும் பொருளாதார ரீதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து மக்களும் இன்று பாரிய பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் பின் தேவையாக இருந்த அரசியல் விழிப்புணர்ச்சியின் பின்னர், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் நம்பிக்கையை சம்பாதிக்ககூடிய அரசாங்கமொன்று அத்தியாவசியமாகும்.
எல்லாமக்களுக்கும் செவிசாய்த்து, உள்வாங்கி, சமபிரஜைகளாக மதிப்பதே பொருளாதார மீட்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் வழிகோலும் என்பது எமது நம்பிக்கை. பொருளாதார வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் அத்தியாவசியமான தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வுக்கு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்
அடுத்த தேர்தலில் மக்களது தீர்ப்பு கொடுக்கப்படும் வரை அவர் இந்த ஜனாதிபதி பதவியை நம்பிக்கை பொறுப்பாக மட்டுமே வைத்திருப்பார். 10/10
— M A Sumanthiran (@MASumanthiran) July 20, 2022
த.தே.கூ. வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அதே வேளையிலே அனைவரையும் உள்ளடக்கும் ஐக்கிய இலங்கையை மையமாக வைத்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்போம் எனவும் விசேடமாக பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் எமது மக்களுக்கு இது அத்தியாவசியமானதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த தேர்தலில் மக்களது தீர்ப்பு கொடுக்கப்படும் வரை இந்த புதிய அதிபர் பதவியை நம்பிக்கை பொறுப்பாக மட்டுமே வைத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
