இலங்கையில் கொவிட் தொற்று பரவாமலிருக்க வெளியான நான்கு அறிவுறுத்தல்
கொவிட் வைரஸ் நாட்டில் பரவலாமல் இருக்க தான் கூறும் நான்கு அறிவுரைகளை மக்கள் பின்பற்றினாலே போதுமானது என இலங்கை மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் கொவிட் தொற்றை ஒடுக்க கட்சித் தலைமைக் குழுவும் நான் முன்மொழிந்த கிராமக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தால் இன்று இது போன்ற ஒரு பேரழிவு நிலைமை ஏற்பட்டிருக்காது முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டபோது, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவற்றை நிராகரித்ததாக அவர் கூறினார்.
ஒரு மருத்துவராக எனது பரிந்துரைகளை நிராகரித்ததற்கு வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு நான்கு செய்திகளை மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த நான்கு ஆரோக்கிய பழக்கங்களை நாம் செயற்படுத்தினால், வைரஸ் தானாகவே வளராது. கொவிட் வைரஸ் காற்றுப்பாதையில் வளரும் செல்களுக்கு அடிமையாகிறது. மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் இரண்டு மீற்றர் தூரத்தில் இருக்க வேண்டும் என்றார்.

