விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் ( படங்கள்)
Sri Lanka Police
Colombo
Trincomalee
By Vanan
ஹபரன பிரதான வீதியில் விபத்து
திருகோணமலை - ஹபரன பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று(18) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹபரன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தெடார்பில் மேலும் தெரிய வருகையில்,
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற வான் ஒன்றும் திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற பாரவூர்தியொன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம்
விபத்துக்குள்ளானோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்ளிட்ட நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்