இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாட்டில் தினசரி நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்றுமுதல் (14.02.2025) நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்றும் மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுரைச்சோலையின் (Lakvijaya Power Plant) நிலைமையைக் கருத்தில் கொண்டு, மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா, இல்லையா என்கின்ற முடிவு எடுக்கப்படும் என நேற்றைய தினம் (13.02.2025) அறிவிக்கப்பட்டிருந்தது.
மின் தடை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.02.2025), நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் பிறப்பாக்கிகள் செயலிழந்திருந்தன.
இதன் விளைவாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், 12ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் மின்வெட்டு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்று முதல் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)