வெளிநாடொன்றில் கோர விபத்து - 27 பேர் உடல் கருகி பலியான சோகம்
மெக்ஸிக்கோ நாட்டில் வான் மற்றும் லொறி (Tractor-trailer) மோதிய கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 27 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மெக்ஸிக்கோவில் Ciudad Victoria அருகே வான் மற்றும் லொறி (Tractor-trailer) நேருக்கு நேர் மோதியதில் சில நிமிடங்களில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த கோர விபத்தில் 27 பேர் பலியாகினர். அவர்களில் 24 பேர் வானுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்டனர். மேலும் ஒரு பெண்ணும், குழந்தையும் அவர்களது வாகனத்தின் அருகே இறந்து கிடந்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்பு படையினர்
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. எனினும் லொறியின் சாரதி தப்பியோடியதாக தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் தெற்கு வெராக்ரூஸ் மாநிலத்தில் வசித்தவர்கள் என்று EL Pais செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மெக்ஸிகோ நாட்டவர்கள்
வழக்கறிஞர் அலுவலக வட்டாரம் கூறும்போது, பாதிக்கப்பட்ட அனைவரும் மெக்ஸிகோ நாட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணங்களை புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் வடக்கு மாநிலமான நியூவோ லியோனில் கால்வாயில் பிக்கப் டிரக் விழுந்ததில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


