3 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
வெளிநாடொன்றில் இருந்து 3 வருடங்களுக்குப் பின்னர் நாடு திரும்பிய பெண் ஒருவர் வாகன விபத்து ஒன்றினால் உயிரிழந்துள்ளார்.
பெல்மடுல்ல காவல்துறைபிரிவுக்குட்பட்ட ரில்ஹேன பகுதியில் குறித்த பெண் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, பேருந்தில் மோதிய முச்சக்கர வண்டியானது, சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
உயிரிழப்பு
அத்துடன், பேருந்தில் பயணித்த 10 காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவேரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 5 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)