யாழ். வட்டுக்கோட்டை காவல்துறை உத்தியோகத்தரின் முறையற்ற செயல் - பறந்த கடிதம்
யாழ். வட்டுக்கோட்டை (Vaddukoddai) காவல் நிலையத்தில் கடமை புரிந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபாலவினால் இந்த இடமாற்றமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக வெளிவந்த நிலையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
பிரதி காவல்துறை மா அதிபர் பதவியேற்பு
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மாறப்பண இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன அண்மையில் நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி காவல்துறை மா அதிபர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
