திருகோணமலை துறைமுகமும் தாரை வார்ப்பு? அம்பலத்துக்கு வந்த உயர்மட்ட தகவல்

trinco sale america port
By Vanan Jul 13, 2021 02:38 PM GMT
Report

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் வழங்க இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்துக் கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவுமே கூறவில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் சீனாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உத்திகளில் ஒன்றாகவே திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போதே இது குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. பசில் ராஜபக்ச கடந்த வாரம் நிதியமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இந்தவொரு நிலையிலேயே கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதில் பெரும் பங்காற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு கொடுக்கவுள்ள தகவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை வைத்து இலங்கை அரசாங்கம் செய்யவுள்ள திரைமறைவிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை இந்த அறிக்கை ஊடாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார அம்பலப்படுத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் 3000 அமெரிக்க டொலர் முதலீட்டுப் பெறுமதியாக இந்த உடன்படிக்கை செய்யப்படவுள்ளது என்றும் அவர் இன்று திங்கட் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் வசந்த பண்டார தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் செய்துகொள்ள உத்தேசித்துள்ள உடன்படிக்கையானது ரணில் - மைத்திரி தலைமையிலான அரசாங்கம் செய்துகொள்ளவிருந்த எம்.சி.சி உடன்படிக்கையை விடப் பயங்கரமானது என்று எச்சரித்துள்ளார்.

அதனூடாக 33 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்கா வசமாகப் போவதாகவும், அந்தக் காணிகளில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கே முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகத்தில் ஈடுபடும் நோக்கில், அமெரிக்கா தமது படைகளை அங்கு அழைத்துவராது என்பதை உறுதிபடக் கூற முடியாது என்றும் தென்னிலங்கையில் செயற்படுகின்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளரான வசந்த பண்டா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மைத்திரி ரணில் அரசாங்கத்தின் காலத்தில் கைச்சாத்திடப்படவிருந்த எம்.சி.சி உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டால் இலங்கையில் உள்ள பெறுமதிமிக்க நிலப்பரப்பை அமெரிக்கா கொள்வனவு செய்துவிடும் என்ற அச்சத்தை இலங்கை மக்கள் மத்தியில் தற்போதைய ஆளுந்தரப்பு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தனர்.

குறிப்பாக அமெரிக்க உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டால் பௌத்த மக்களுக்கு கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்குக்கூட பிரவேசிக்க முடியாமற் போய்விடும் என்றே ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தவொரு நிலையிலேயே ராஜபக்ச அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யவுள்ளதாக தேசியப் பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025