பொறுப்பு - துறப்பு இல்லாது கிடக்கும் நுவரெலியா மாவட்டத்தின் 611 வீதிகள்!
நுவரெலியா மாவட்டத்தில் 611 வீதிகள் எந்தவொரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாதவை என தெரியவந்துள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில்ற ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேரிடர் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
இவை வர்த்தமானியில் குறிப்பிடப்படாத வீதிகளாக இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.
800க்கும் மேற்பட்ட வீதிகள்
நுவரெலியா மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வீதிகள் வர்த்தமானியில் குறிப்பிடப்படாதவை. அதாவது எந்த ஒரு அரச நிறுவனங்களுக்கும் சொந்தமில்லாத பாதைகளாக காணப்படுகிறது.

ஆனால் இவை அனைத்தும் கிராமங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் வீதிகளாகும். ஆனால் இதில் 200 வீதிகள் தோட்டங்களுக்கு சொந்தமானதாகும்.
எனினும் தோட்ட நிர்வாகத்தால் இவை புனரமைக்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
'டித்வா'சூறாவளியால் ஏற்பட்ட கன மழையால் மலையகத்தின் சில பாதைகள் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது. இன்னும் சில பகுதிகளில் உள்ள மக்கள் நகரங்களுக்கு கால்நடையாக கூட செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.
வீதி அமைப்பை மீட்டெடுப்பதற்கான திட்டம்
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் வீதி அமைப்பை மீட்டெடுப்பதற்கான திட்டம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பித்தல்களை விரைவில் முடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் இந்த வீதிகளை, RDA வீதி அபிவிருத்தி அதிகார சபையோ அல்லது PRDA பிரதேச வீதி அபிவிருத்தி அதிகார சபையோ பொறுப்பேற்க முன்வரவில்லை என்பது இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 611 வீதிகளை A.B.C என பிரித்து உரிய நிறுவனங்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |