பற்றி எரியும் மத்திய கிழக்கு... 48 மணிநேரக் கெடு: ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் முழுமையாகத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தையும் (Power Plants) தரைமட்டமாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, போரை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்கா தனது எரிசக்தி நிலையங்களைத் தாக்கினால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் தகவல் தொழில்நுட்பம், குடிநீர் சுத்திகரிப்பு (Desalination) மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த 48 மணிநேரக் கெடுவிற்கு மத்தியில் இஸ்ரேலின் டிமோனா (Dimona) மற்றும் ஆராட் (Arad) பகுதிகளில் ஈரான் நடத்திய நேரடி ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேலைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் முடக்கம் மற்றும் போர் மூளும் அபாயத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அதிரடி கெடுவும் ஈரானின் அஞ்சாத பதிலடியும் மத்திய கிழக்கை ஒரு முழு அளவிலான உலகளாவிய போரை (World War scenario) நோக்கித் தள்ளியுள்ள ஒரு மிக முக்கியமான அரசியல் கட்டமாக மாறியுள்ளதன் அடிப்படையில், இதனை விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் கழுகு பார்வை நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |