மீண்டும் நோபல் பரிசு குறித்து சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்...!
எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தனக்கு எட்டு நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசுலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும்.
கெட்டவர்கள்
நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகின்றோம்.

நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது மற்றும் கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.
நோபல் பரிசு
ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன், போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

இப்போது அவர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று சொல்கின்றார்கள்.
நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள் மற்றும் ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் ஆனால் எனக்கு அது வேண்டாம் மற்றும் நான் பேராசைப்பட விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |