ஹார்முஸ் நீரிணையில் அதிகரிக்கும் பதற்றம்: ஈரானின் பலத்தை முடக்கியதாக ட்ரம்ப் அதிரடி
ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை அமெரிக்கா சிதைத்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அங்கு 30-இற்கும் மேற்பட்ட கண்ணிவெடி கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் உரிமை கோரியுள்ளார்.
இருப்பினும் அந்த நீரிணையில் ஏதேனும் கண்ணிவெடிகள் வீசப்பட்டதா என்பது குறித்து அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணிவெடி கப்பல்
மேலும் தெரிவித்த அவர், தங்களுக்குத் தெரிந்தவரை அவர்களின் அனைத்து கண்ணிவெடி கப்பல்களையும் தாக்கியுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஏதேனும் கண்ணிவெடிகள் உள்ளே வீசப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தாங்கள் உறுதியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் திறக்க உதவுமாறு மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், சில நாடுகள் உதவிக்கு வருவதாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை எரிவாயு
அதேவேளை, மற்ற நாடுகள் உதவுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி, உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பகுதியைத் கொண்டு செல்லும் இந்த நீரிணையை மூடியுள்ளது.

இந்த நிலையில் அதனைப் பாதுகாக்க மற்ற நாடுகள் உதவ வேண்டும் என ட்ரம்ப் விரும்புகிறார்.
இந்தநிலையில், தாங்கள் பல ஆண்டுகளாகப் பாதுகாத்த சில நாடுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களின் அந்த ஆர்வத்தின் அளவு தனக்கு முக்கியமானது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |