மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புக்களுக்கு மரண வளையம்: இஸ்ரேலுக்கு இன்று ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கப் படைத்தளமான கட்டாரின் அல் உதெய்த் தளம் உட்பட்ட அமெரிக்கத்தளங்களை ஈரானிய ஏவுகணைகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முறிக்க முயலுவுது செய்வது அவருக்கு சீற்றத்தை உருவாக்கியுள்ளது.
போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் ஈரான் மீது தாக்குதலை நடத்தும் வகையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் பாரிய குண்டுகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளமை குறித்து தனது கண்டனத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அதன்போது, இஸ்ரேலிய போர்விமானங்கள் தமது நடவடிக்கை திட்டத்தை கைவிட்டு விட்டு உடனடியாக இஸ்ரேலுக்கு திரும்ப வேண்டும் எனவும் அவ்வாறு குண்டுவீச்சில் விமானங்கள் ஈடுபட்டால் அது அது ஒரு பெரிய போர்நிறுத்த விதிமீறல் என குறிப்பிட்ட பின்னர் நெதர்லாந்தில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் பங்கெடுக்க அவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று கட்டாரில் உள்ள அமெரிக்கத்தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பின்னரான பரபரப்பு நிலவரங்களை மையப்படுத்திவருகிறது இன்றைய செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
