அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு! ஈரானுக்கு பேரிடி
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரான் நாட்டுப் படகுகளைச் சுட்டு அழிக்கமாறு அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் நாட்டுப் படகுகள் சிறியதாக இருந்தாலும், அவை நீரிணையில் கண்ணிவெடிகளை வைத்தால் எவ்வித தயக்கமுமின்றி அவற்றைச் சுட்டு அழிக்குமாறு தான் கடற்படைக்குக் கட்டளையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் ஏற்கனவே கடல் மட்டத்தில் அழிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தற்போது எஞ்சியுள்ள சிறிய படகுகளையும் இலக்கு வைக்குமாறு கூறியுள்ளார்.
ஈரானின் கடற்படைப் பலம்
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும், அந்தப் பணிகளை மூன்று மடங்கு வேகத்தில் முன்னெடுக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் சூழலில், கப்பல் போக்குவரத்தைச் சீராக முன்னெடுப்பது குறித்து ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஈரானின் கடற்படைப் பலம் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்னும் சிறிய படகுகள் போன்ற வளங்களைத் தங்களின் வசம் வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |