ஈரானுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை அடைய அமெரிக்காவுடன் ஒன்றிணையும் பிரித்தானியா
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசி மூலம் ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த முக்கிய கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பது உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு அவசியம் என இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரிட்டன் அரசின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, அவர்கள் விரைவில் மீண்டும் பேச ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ட்ரம்பின் விமர்சனம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில் இராணுவ உதவி வழங்குவதில் தயக்கம் காட்டியதற்காக, பிரிட்டன் பிரதமர் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டாளிகளை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததற்குப் பின்னர் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.

Image Credit: Fox Business
ஈரானுடன் மோதல் தொடங்கியதிலிருந்து செயலிழந்த நிலையில் உள்ள இந்த முக்கிய கடல் வழித்தடத்தில் பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்யும் முயற்சிகளில் பங்கேற்கத் தயாராக உள்ள 22 நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது.
இராணுவ நடவடிக்கை
இதற்கிடையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, இந்த கடல் வழித்தடத்தை மீண்டும் திறக்க தங்கள் கூட்டமைப்பினால் முடியும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Image Credit: NATO
இதன்படி, இராணுவ நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக, உறுப்புநாடுகள் தங்களது பதிலை துல்லியமாக திட்டமிட நேரம் எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |