இந்தியா-பாக் போரை நிறுத்திய ட்ரம்ப்: புடின் தரப்பு வெளியிட்ட ரகசியம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சுவார்தையினால் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உதவியாளர் யுரி உஷாகோவ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து புடின் மற்றும் ட்ரம்ப் கடந்த ஜூன் நான்காம் திகதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேசிய விவகாரங்கள்
இந்தநிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் பேசிய விவகாரங்கள் குறித்து புடினின் உதவியாளர் யுரி உஷாகோவ் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் 70 நிமிடங்கள் நீடித்தது.
கிழக்கு நாடுகள்
ரஷ்யா - உக்ரைன் மோதலில் தொடங்கியது இந்த உரையாடல், பேச்சுவார்த்தையை முறியடிக்க உக்ரைன் முயற்சித்து வருகின்றது.
அப்போது மத்திய கிழக்கு நாடுகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர்.
அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் குறித்தும் பேசப்பட்டதுடன் ட்ரம்பின் தனிப்பட்ட தலையீட்டால் இந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
