எலான் மஸ்கிற்கு தொடரும் எதிர்ப்பு: டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் டெஸ்லாவை குறிவைத்துத் தாக்குதல் மேற்கொள்பவர்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிரான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை குறிவைத்துத் தாக்கும் பயங்கரவாதிகளுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைப்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ட்ரம்பின் எச்சரிக்கை
ஒருவேளை அவர்கள் எல் சால்வடாரில் உள்ள சிறைகளுக்குக் கூட செல்லக்கூடும்.
எல் சால்வடார் சிறைகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெறுகின்ற போதிலும் ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 வாரங்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்