இலங்கையில் தலைகீழாக மாறிய செயல்பாடுகள்! வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள் (படங்கள்)
அரசாங்கத்தின் வாயாடல்களைப் பார்த்த போது அமெரிக்காவிற்கும் பொருளாதாரம் குறித்து வகுப்பு எடுக்கும் என்றே கருதப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - ஹொரவ்பொத்தானை - கலென்பிந்துனுவெவில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இதில்கலந்து கொண்டு கருத்துத் வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பேசிய பேச்சுக்களைப் பார்க்கும் போது இலங்கையின் தேசிய வளங்களை விற்பதற்கு பதிலாக இந்திய நிலங்களையும் இலங்கை கையகப்படுத்தப்படும் என்றே நினைத்ததாகவும், நாட்டின் அனைத்து வளங்களும் இன்று விற்கப்படுவதே இடம்பெறுகின்றது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், விவசாயிகள் பற்றி பேசும் போது சீனாவுக்கும் அரிசி கொடுப்பார்கள் என்றே மக்கள் நினைத்தனர்.
தேர்தலுக்கு முந்தைய பேச்சுக்களைப் பார்க்கும் போது பொருளாதாரத்தை எப்படி கட்டியெழுப்புவது என அமெரிக்காவிற்கும் வகுப்பு கொடுக்கும் என்றே நாம் நினைத்தோம். சுபீட்சத்தின் தொலைநோக்கில் இந்த நாட்டில் வறுமை, அருங்காட்சியகத்திற்கே போடப்படும் என்றே மக்கள் நினைத்தனர்.
ஆனால், இன்று இதையெல்லாம் தலைகீழாக நடக்கின்றது.
அன்றைய சூழலில் பதவிக்காக மலட்டு கொத்து என பேசி இனவாதத்தை தூண்டியவர்கள், இன்று பாகிஸ்தானிடம் கடனாக அரிசி கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.