உயிர் பலியெடுத்த தவெக பிரச்சார கூட்டம் : விஜயை நேரடியாக சாடிய உதயநிதி
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) தெரிவித்துள்ளார்.
கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்திற்கு வரவேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்களின் உரிமை
அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நடக்க கூடாது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட்டம் நடத்தியுள்ளார், எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை.
அத்துடன் மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
