மகாராணியின் உயிரிழப்பை முன்கூட்டியே கணித்த டுவிட்டர் பயனாளி -வைரலாகும் பதிவு
Twitter
United Kingdom
Queen Elizabeth II
Death
By Sumithiran
மகாராணியின் உயிரிழப்பு முன்கூட்டியே கணிப்பு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழப்பை முன்கூட்டியே கணித்த டுவிட்டர் பயனாளி தொடர்பில் தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
பால்மோராவில் சிகிச்சை பெற்றுவந்த மகாராணி நேற்றையதினம் தனது 96 ஆவது வயதில் உயிரிழந்தார்.
Queen Elizabeth II will die on September 8th 2022
— ? (@aidemleoxide) February 4, 2022
இந்த நிலையில் மகாராணி செப்டம்பர் 8,2022 அன்று உயிரிழப்பார் என டுவிட்டர் பயனாளி ஒருவர் கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி பதிவிட்டுள்ளார்.
உலகில் ஏற்படவுள்ள மற்றுமொரு அனர்த்தம்
அத்துடன் அவரது மே 25 ஆம் திகதி பதிவில், மார்ச் 17,2062 அன்று பூமி முழுமையாக தீயில் மூழ்கும் என்று தெரிவித்துள்ளார்.
Earth will be completely engulfed in flames on March 17th 2062
— ? (@aidemleoxide) May 24, 2022
எனினும் டுவிட்டர் பதிவை இட்டவர் யாரென்ற தகவல் வெளிவரவில்லை.

