சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுப் படுகொலை! சகோதரர்கள் இருவர் அதிரடி கைது
தலங்கம - அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் 20 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டை பகுதியில் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டிருந்தனர்.

அதனைதொடர்ந்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக இரு சகோதரர்களை மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |