கசிப்பு வியாபாரியிடம் இலஞ்சம் - இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சிக்கினர்
பொலனறுவை கடவலவெவ பிரதேசத்தில் வசிக்கும் கசிப்பு வியாபாரியிடம் 9,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் மின்னேரிய காவல்துறை சார்ஜன்ட் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கசிப்பு கடத்தல்காரர் என்று கூறப்படும் நபரிடம் தடையின்றி கடத்தலை தொடர மூன்று போத்தல்கள் அரச சாராயம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரச சாராயம் கோரிய காவல்துறையினர்

தன்னிடம் அரசு மதுபானம் இல்லாததால், மூன்று போத்தல்களின் மதிப்புக்கு ஒன்பதாயிரம் ரூபாய் தரலாம் என இந்த கடத்தல்காரன் கூறியதாக ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த காவல்துறை சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிளுக்கு பணம் கிடைத்த நிலையில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் இரு காவல்துறை உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பணத்தை கொடுத்த கசிப்பு வியாபாரி செய்த வேலை

கசிப்பு கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்