யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் அதிரடியாக கைது
Sri Lanka Police
Jaffna
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரால் இன்றையதினம்(24) கைது செய்யப்பட்டனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுபொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப காவல்துறை பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயது மதிக்கத்தக்க மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி