பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெடித்த போராட்டம்
பிரித்தானியாவில் (United Kingdom) புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்திய நிலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
பிரிட்டனின் எசெக்ஸ் மாகாணத்தில் எப்பிங் நகரில் புலம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான விடுதியில் 14 வயது சிறுமி ஒருவர் புலம்பெயர்ந்தவர் ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வலதுசாரி அமைப்பினர்
இந்தநிலையில், அந்த விடுதியை மூடக் கோரி வலதுசாரி அமைப்பினர் விடுதிக்கு வெளியே திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
இதுதொடர்பான, வழக்கை விசாரித்த எப்பிங் மாவட்ட நீதிமன்றம் விடுதியை நடத்த தற்காலிக தடை விதித்து மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பிரிட்டன் இணையமைச்சர் தெரிவித்தார்.
வார விடுமுறை
இதையடுத்து, வார விடுமுறை நாளான சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடி புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதனுடன், புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால், பிரிஸ்டல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதன்விளைவாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

