புகலிடகோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டம் : பிரித்தானியா ஏற்படுத்தியுள்ள அதிரடி மாற்றம்
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டமொன்றை பிரித்தானியா நடைமுறைப்படுத்தவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்வேன் என உறுதியளித்து கெய்ர் ஸ்ட்ராமர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
இருப்பினும், அதற்கு பதிலாக தற்போது புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அவர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய திட்டம்
பிரித்தானியாவை ஆண்ட முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டா போன்ற ஒரு நாட்டுக்கு நாடுகடத்தி அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கும் வரை அவர்களை அந்நாட்டில் தங்கவைக்க திட்டமிட்டிருந்தது.
தற்போது புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கெய்ர் ஸ்ட்ராமர் திட்டமிட்டுள்ளார்.
புகலிடக்கோரிக்கைகள்
இதனடிப்படையில், புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு மேல் முறையீடுகளும் தோல்வியடையும் பட்சத்தில் அத்தகையோரை மேற்கத்திய பால்கன் நாடுகளுக்கு அனுப்ப ஸ்டார்மர் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இத்தகைய புகலிடக்கோரிக்கையாளர்கள், அல்பேனியா, செர்பியா மற்றும் போஸ்னியா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பான நாடுகளிலிருந்து வந்தவர்கள் என கருதப்படுவோர், இந்த நாடுகளிலிருந்து மீண்டும் தங்கள் நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதுதான் திட்டம் என்ற அடிப்படையில், இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
