நானும் மனைவியும் வேறுபட்ட நபர்கள்..! மனம் திறந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்னர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில், தானும் தன் மனைவி அக்ஷதாவும் வேறுபாடு மற்றும் வித்தியாசம் கொண்ட நபர்கள் என தெரிவித்துள்ளார்.
அதாவது, நான் எல்லாவற்றையும் சுத்தமாக வைக்க விரும்புவேன், ஆனால் அவர் துப்புரவற்ற, அழுக்கான நிலையில் வைப்பார். நான் திட்டமிட்டு எதையும் செய்வேன், அக்ஷதா திடீரென திட்டமிடாமல் மேற்கொள்வார்.
இதைச் சொல்வதற்காக அவர் என்னை பாராட்ட போவதில்லை, ஆனால் நான் நேர்மையாக பேசுகிறேன். வீடுகளில் எல்லா இடங்களிலும் ஆடைகள்... மற்றும் காலணிகள் எல்லாம் கிடக்கும் என ரிஷி சுனக் குறித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரதமராக தெரிவான ரிஷி சுனக்
இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதவியேற்றார்.
முன்பு பிரதமராக பதவியேற்ற லிஸ் ட்ரஸ் கடந்த 20 ஆம் திகதி தனது பதவியில் இருந்து விலகினார்.
பொருளாதார நெருக்கடியை தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் அவர் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இங்கிலாந்தில் ஆளும் கட்சித் தலைவர் தான் பிரதமர் பதவியை வகிக்க முடியும்.
இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியிட முடிவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினர்.
எவ்வாறாயினும், வேட்பு மனுதாக்கல் கால அவகாசம் முடிய சில மணி நேரங்களுக்கு முன்பு போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.