பிரித்தானிய ராஜகுடும்பத்தில் புதிய சலசலப்பு - பறிக்கப்படுமா இளவரசர் பட்டம்; மன்னரின் முடிவு!
பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் பட்டம் பறிக்கப்படடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடாபில் வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ராஜகுடும்பம், தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையிலேயே தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வேல்ஸ் இளவரசர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வேல்ஸ் கவுன்சில் ஒருமனதாக வாக்கெடுப்பை முன்னெடுத்துள்ளமையானது பிரித்தானிய ராஜகுடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
வேல்ஸ் கவுன்சிலின் முடிவு
மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, வேல்ஸ் இளவரசர் பட்டமானது இளவரசர் வில்லியத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கும் தருணத்தில் இந்த முடிவுக்கு வேல்ஸ் கவுன்சில் வந்துள்ளது.
வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடம் இருந்து குறித்த பட்டம் பறிக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மட்டுமின்றி, 1969ல் சார்லஸ் வேல்ஸ் இளவரசர் பட்டம் பெறும்போதும் அங்குள்ள மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், முக்கிய நபர்களால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது அதே சூழல் உருவாகியுள்ளது. வேல்ஸ் மக்களிடம் ஆலோசனை பெற்று, குறித்த பட்டம் நீக்கப்பட வேண்டுமா என்பதில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.
பட்டம் ரத்து செய்வதற்கு ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து
வேல்ஸ் தற்போது நவீனமயமாக்கப்பட்ட ஜனநாயக நாடு, அங்குள்ள மக்களிடம் அவர்களின் கருத்துகளை பதிவு செய்வதே முறை எனவும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, தங்கள் மன நிலையை தற்போதைய வேல்ஸ் இளவரசர் பட்டம் பெற்ற வில்லியம் புரிந்து கொள்வார் என நம்புவதாகவும் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, 36,000 மக்கள் குறித்த பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்து போட்டுள்ளனர். இதேவேளை, 1283ல் இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்ட் கட்டளையிட்டமையால் உண்மையான வேல்ஸ் இளவரசர் Dafydd ap Gruffydd கொடூரமாக கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் குறித்த பட்டமானது எட்வர்ட் மன்னரின் 16 வயது மகனுக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.