பிரித்தானியாவில் உறையும் குளிரில் ஜலசமாதியான புலம்பெயர்ந்தோர் - உடனடிக்கைது!

Refugee Immigration United Kingdom France Death
By Kalaimathy Dec 19, 2022 06:02 AM GMT
Report

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் படகொன்று கவிழ்ந்து விபத்துள்ளான சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையிலேயே அதிகாரிகள் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். புதன்கிழமை இரவு, பிரான்ஸின் கலாயிஸ் துறைமுகத்துக்கு தெற்கே அமைந்துள்ள ஆம்பிள்ட்யூஸ் கடற்கரையிலிருந்து பிரித்தானியா நோக்கி ஆங்கிலக்கால்வாய் வழியாக பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சிறு படகொன்றில் புறப்பட்டுள்ளனர்.

காவல்துறை கைது

பிரித்தானியாவில் உறையும் குளிரில் ஜலசமாதியான புலம்பெயர்ந்தோர் - உடனடிக்கைது! | Uk Tragedy Migrant Boat Capsized Refugee France

ஆனால் குறித்த படகானது ஆங்கிலக்கால்வாயில் உறையவைக்கும் குளிரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர். இந்த நிலையில், படகுடன் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் நுழைய முயற்சித்ததாக கூறி 19 வயது இப்ராஹிம் பா என்பவரை கைது செய்து அவர் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ளனர்.

குறித்த இளைஞர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இன்று ஃபோக்ஸ்டோன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிநுவர்கள் உட்பட மொத்தம் 43 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த படகில் அல்போனியா, ஆப்கானிஸ்தான், ஈராக், செனகல் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் பயணித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

சுமார் 50 பேர்கள் வரையில் அந்த படகில் பயணித்திருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். படகு விபத்துக்குள்ளான நேரம் அதிகாலை என்பதாலும், வெப்பநிலை -3C என பதிவாகியிருந்ததாலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்க அதிகாரிகள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்ட விபத்து

பிரித்தானியாவில் உறையும் குளிரில் ஜலசமாதியான புலம்பெயர்ந்தோர் - உடனடிக்கைது! | Uk Tragedy Migrant Boat Capsized Refugee France

கடந்த நவம்பர் மாதமும் இதுபோன்ற ஒரு படகு விபத்து ஆங்கிலக்கால்வாயில் ஏற்பட்டது. 34 புலம்பெயர்ந்தோருடன் புறப்பட்ட படகொன்று கால்வாயில் மூழ்கியதில் 31 பேர்கள் பலியாகினர்.

இந்த நிலையிலேயே, ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் புலம்பெய்ர்ந்தோரை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திட்டமொன்றை வகுக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

  மேலும், ஜூன் மாதத்தில் இருந்து ஆபத்தான படகு பயணம் மேற்கொண்டு பிரித்தானியாவில் நுழைந்துள்ள புலபெயர்ந்தோரின் எண்ணிக்கை 30,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015