உக்ரைனில் நீர்மின் நிலைய அணை மீது தாக்குதல்..!
சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள உக்ரைன் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் சோவியத் கால ககோவ்கா நீர்மின் நிலைய அணை காணப்படுகிறது.
உக்ரைனின் பிரதான நீர்மின் நிலையத்திற்கு நீரை வழங்கும் முக்கிய அணை இதுவாகும்.
குண்டுவெடிப்பு

இந்த அணை 2014யில் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகிறது.
தற்போது குறித்த அணையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் அணை உடைந்து வெள்ளம் உண்டாகியுள்ளது.
இதற்கு காரணம் யார் என்று தெரியாத நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர்.
அதே சமயம், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான Zaporizhzhia அணுமின் நிலைய அணை அழிந்ததால் எந்த ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய பயங்கரவாதிகள்

இந்நிலையில், அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிர்ந்துள்ளார்.
Russian terrorists. The destruction of the Kakhovka hydroelectric power plant dam only confirms for the whole world that they must be expelled from every corner of Ukrainian land. Not a single meter should be left to them, because they use every meter for terror. It’s only… pic.twitter.com/ErBog1gRhH
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 6, 2023
அத்துடன், ''ககோவ்கா நீர்மின் நிலைய அணையின் அழிவு, உக்ரேனிய நிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் ரஷ்ய பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை முழு உலகிற்கும் உறுதிப்படுத்துகிறது' என தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் வான்வெளி தாக்குதலால் இந்த அணை அழிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெரு வெள்ளப்பெருக்கு

இந்த தாக்குதல் மூலம் இருநாட்டு எல்லைகளிலும் உள்ள பல கிராமங்களை மூழ்கடிக்கும் வகையிலான பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு உக்ரைன் வழியாக பாயும் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணையின் கீழ்பகுதியில் கெர்சன் உட்பட பல நகரங்கள் இருப்பதால் இது ஒரு பேரழிவுக்குரிய அணைத்தகர்ப்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரமியா பகுதிக்குரிய நீர்வினியோகத்தை முடக்கவும் போர்க்களத்தை திசைதிருப்பவும் உக்ரைன் இதனை செய்ததாகவும் ரஷ்ய குறிப்பிட்டுள்ளது.
150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு குளிரூட்டும் நீர்த் தேக்கத்திற்கு இங்கிருந்தான் நீர் செல்கின்றது.
ரஷ்யாவுக்கு கண்டனம்

இரண்டு நாடுகளும் மாறிமாறி இந்த சம்பவத்துக்கு குற்றஞ்சாட்டும் நிலையில் தகர்க்கப்பட்ட அணையிலிருந்து இருந்து வேகமாக வெளியேறிய நீர் ஏற்கனவே நூற்றுக்கணக்காக வதிவிடங்களை மூழ்கடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சேதமடைந்த அணையை சீர் செய்வது இப்போதைக்கு சாத்தியமில்லையென்பதால் வெள்ளப்பெருக்கு அபாயமுள்ள இடங்களில் இருந்து மக்கள் அவசரமாக இரண்டு நாடுகளாலும் வெளியேற்றி வருகின்றன.
WATCH THE WATER : Avec le barrage de Kakhovka dans le sud de l’Ukraine détruit, une vague d’eau devrait inonder des dizaines de villes dans les prochaines heures. pic.twitter.com/1qcOSRFnBt
— Le Canal 17 sur Telegram (@MaelAffarezzo) June 6, 2023
இந்த நிலையில் அணை தகர்க்கபட்டமை ஒரு போர்க்குற்றம் என ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்யா உரிமைகோரியுள்ளது

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், ககோவ்கா அணை மீதான தாக்குதல், வன்முறையை அதிகரித்து, குடிமக்களின் உள்கட்டமைப்பை குறிவைக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்திக்கு இணங்க உள்ளது என்றார்.
இதற்கிடையே பாக்முத் நகர்; உட்பட பல திசைகளில் தமது இராணுவம் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திவருதாக உக்ரைனிய இராணுவம் அறிவித்துள்ளது.
எனினும் மேற்குலக நாடுகள் அண்மையில் உக்ரைனுக்கு வழங்கிய லெப்பாட் 2 ரக தாங்கிகளில் எட்டு தாங்கிகள் உட்பட 28 தாங்கிகள் மற்றும் 109 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா உரிமைகோரியுள்ளது.