கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள்
ஒரே நேரத்தில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக மாதாந்த சம்பளம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசேட விசாரணைக்காக சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், அந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையிலேயே நீதிமன்றத்தில் மீண்டும் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |