உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யாவின் பகிரங்க அறிவிப்பு! (காணொலி)
people
russia
ukraine
war
By Thavathevan
உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மக்கள் நலன் கருதி உக்ரைன் நேரப்படி காலை ஆறு மணி முதல் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, கடந்த மாதம் இருபத்துநான்காம் திகதி அந்த நாட்டின் மீது யுத்தத்தை மேற்கொண்டிருந்தது.
கடந்த பத்து நாட்களாக உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்