ரஷ்ய ஏவுகணைக்கு இலக்கான பச்சிளம் குழந்தை! பிரசவித்து சில நிமிடங்களில் நடந்த துன்பியல்
ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலினால் உக்ரைனின் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலையில் பிரசவித்து ஒரு சில நிமிடங்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இத்தாக்குதலானது உக்ரைனின் தென்பகுதியான சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு இலக்கான தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத கொலை
இத்தாக்குதலினால் வைத்தியர் ஒருவரும் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட வைத்தியசாலை உள்ள பகுதியை நோக்கி ரஷ்ய படையினர் பாரிய ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும், ரஷ்யா ஒன்பது மாத போரினால் சாதிக்க முடியாததை பயங்கரவாத கொலை மூலம் சாதிக்க முயல்கின்றது. அது ஒருபோதும் சாத்தியமாகாது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா
